Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்

பல்லவி

நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.

சரணங்கள்

1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம்

2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம்

3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம்

4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே. – நிச்சயம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version