Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத

ஒரு நாளும் பிரியாத
அன்பு தோழனே விட்டு
ஒரு நாளும் விலகாத
அன்பு தோழனே (2)
சிநேகிதா சிநேகிதா
உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2)

உயிரினும் மேலாய்
நேசித்த நண்பன்
துரோகியாய் மாறிடினும்…
உயிர் தந்த நண்பா
நீர் மட்டும்
எந்தன் உயிரோடு
கலந்து விட்டாய்… (2)
சிநேகிதா….. (2)

திக்கற்று இருந்தேன்
பயந்துப்போய் தவித்தேன்
துணையாக வந்த நண்பனே…
தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன்
தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)
சிநேகிதா… (2)
ஒரு நாளும்… (2)
சிநேகிதா…

Leave a Comment Cancel Reply

Exit mobile version