Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2
பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே
பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே
எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

3. அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2
– ஒரு வார்த்தை

Leave a Comment Cancel Reply

Exit mobile version