Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன் ,
இவ்வுலோகம் காடு தான்,
வானாகரம்
தந்து என்னைப் போஷியும்.

2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன் ;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்.
வழியில் நடத்துமேன் ;
வல்ல மீட்பர் !
என்னைத் தாங்கும், இயேசுவே.

3.சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றித் தந்து ,
என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன் .

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

Leave a Comment Cancel Reply

Exit mobile version