Paavi Ennidam Vara – பாவி என்னிடம் வர

பல்லவி
பாவி, என்னிடம் வர
மனதில்லையா? ஓ!
சரணங்கள்
1. பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ,
சீவன் தனைப்பெறவே. – ஓ! பாவி
2. இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்
தெருளொளி தனைப் பெறவே. – ஓ! பாவி
3. என் சமாதானம் உன் சுகமாகும்,
நெஞ்சைப் பூராய்த் திறந்து. – ஓ! பாவி
4. அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ?
பரிசுத்தஞ் செய்வேனே. – ஓ! பாவி
5. மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்,
விண்ணிலிடங் கிடையா. – ஓ! பாவி
6. எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்,
கணத்தில் விரைந்திடுவாய். – ஓ! பாவி

Leave a Comment Cancel Reply

Exit mobile version