Parisutha Paranae thuthi umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு

பல்லவி
பரிசுத்த பரனே துதியுமக்கு
பரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2)
சரணங்கள்
1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த
திருமறை முடிவே, துதியுமக்கு
திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா
கருணையின் கடலே துதியுமக்கு – பரி
2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்
நிலையே, நிதியே, துதியுமக்கு
கெத்சமனேயிலதி துயர் கொண்டாய்
அதிசய அன்பே துதியுமக்கு – பரி
3. அன்னாவின் மனையில் கன்னத்திலறைய
சின்னப்பட்டவரே துதியுமக்கு
முகத்தினில் துப்பி முதுகினிலடித்த
பகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு – பரி
4. நெடுங்குருசேறி கடுந்துயர் கொண்டு
மடிந்த என் சிரசே, துதியுமக்கு
மரணத்தை வென்ற காரணத்தால் இந்த
தருணத்தில் மிகுந்த துதியுமக்கு – பரி

Leave a Comment Cancel Reply

Exit mobile version