பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2

என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை

1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் -2
பாதம் அமர்ந்திருப்பேன் -2
அதுதான் மிக நல்லது

அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர்

2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் -2
இலையுதிரா மரம் நான் -2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக

3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் -2
பயமில்லை வெயில் காலத்தில் -2
பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக

Leave a Comment Cancel Reply

Exit mobile version