Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக

1. சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்;
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,
ஞானம், லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுப்பேனே முற்றிலும்.
2. உமக்காகப் பாடுபட்டோன்
நஷ்டப்படமாட்டானே;
உமக்கென்று ஜீவன் விட்டோன்
சாகா ஜீவன் பெற்றானே
உம்மை வெல்ல மீட்பர் என்று
சொல்லி, நித்தம் பற்றுவேன்;
கஸ்திப்பட்டும் சாவை வென்று,
வாடா கிரீடம் பெறுவேன்.
3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,
நீரே தஞ்சம் ஆகுவீர்;
கஸ்தி என்ன நேரிட்டாலும்,
இனி மேன்மை தருவீர்;
உமதன்பு என்னைத் தேற்ற,
துக்கம், பயமில்லையே
நாதா, உம் பிரசன்னம் நீங்க
இன்பமெல்லாம் துன்பமே.
4. நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு,
வரும் செல்வம் நோக்கிப்பார்
மோட்ச நன்மை தேடிக்கொள்ளு,
உன் சுதந்தரத்தைக் கா;
கொஞ்ச வேளைக்குள் பறந்து
இயேசு அண்டை சேருவாய்;
தெய்வ தூதரோடு நின்று
என்றென்றைக்கும் துதிப்பாய்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version