Thooyanaai Nee Vaazha Kartharidam – தூயனாய் நீ வாழ கர்த்தரிடம்

1. தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் கேள்;
அவருடன் சேர்ந்து வேதத்தைப்படி
சான்றோருடன் ஒன்றாய் ஏழையைத் தாங்கு;
யாவையும் மறந்து தேவ ஆசீர் தேடு
2. தூயனாய் நீ வாழ லோகத்தைத் தள்ளு;
இயேசுவோடிருந்து தனி தியானம் செய்;
இயேசை நோக்கிப்பார்த்தால் அவர்போல் ஆவாய்;
அவர்தம் அழகைக்காண்பார் நண்பர் உன்னில்
3. தூயனாய் நீ வாழ தேவனைத் தேடு;
என்ன நேரிட்டாலும் அவரைப் பின்செல்
துன்ப துக்கமேனும் இன்னும் அவர்பின்செல்;
இயேசுவை நோக்கி அவர் வாக்கை நம்பு
4. தூயனாய் நீ வாழ சாந்தமாயிரு;
எண்ணம் நோக்கமெல்லாம் அவர் ஆளட்டும்;
அன்பின் ஊற்றருகே அவர் நடத்துவார்;
மேலோக சேவைக்காய் ஆக்கிடுவாரே

Leave a Comment Cancel Reply

Exit mobile version