Um Avathaaram Paarinil – உம் அவதாரம் பாரினில்

1 உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
கர்த்தா, உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்.
2 சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும், திவ்விய வாசகன்,
அநாதி ஜோதி ரூபம் நீர்,
என்றே தெரிந்துகொண்டனன்.
3 கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்;
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்.
4 உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து,
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது.
5 சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
பூலோக ஜோதியான நீர்,
பிதா, நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version