Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையே
மாபெரும் இன்பமே – 2
உம் திரு பாதத்திலே
பணிந்து தொழுதிடுவேன் – 2
அந்தகார இருள் நீக்கும்
சுடர் ஒளி நீர் தானே
என் வாழ்வில் நீரே உதித்தீரே
வழியும் நீரே
சத்தியம் நீரே
ஜீவனும் நீரே
என் ஏசுவே – 2

1. பசுமையான இடங்களில் என்னை – 2
நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்
நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2
பிரியாத நேசர் நீரே
நல்ல மேய்ப்பர் நீரே

2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2
எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரே
எனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2
கனிகள் கொடுத்திடுவேன்
மகிமை படுத்திடுவேன்

Leave a Comment Cancel Reply

Exit mobile version