Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான

1.உன் நெஞ்சிலே
உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவார்.
2.ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு .
3.ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர் .
4.பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் ,
நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக
பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.
5.இக்கட்டுகளினாலே
கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே
இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,
சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும்
நாள் வரப்போகுது .
5.உன் கவலைகளுக்கு
இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு
இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல ,
நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி .
6.நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட
சலிப்பை நீக்குவார் .
7.அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப் பாடுவாய் .
8.கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;
பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் ,
அப்போ பிழைக்கிறோம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version