Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம்

உயிர்த்த நாதருக்கே மங்களம்
பல்லவி
சுபஜெய மங்களமே நித்திய சுபஜெய மங்களமே
சுகமே தரவே புவிமீ துயிர்த்தசுதனேசு நாதருக்கே
சரணங்கள்
1.தீர்க்க ருரைத்தனரே-நின்று
ஜேசு உயிர்த்தனரே
ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து
ஜெயமா யெழுந்தவர்க்கே- சுப
2.தூதர் சங்க முழங்க வானம்
ஜோதியினா லிலங்கத்
துரிதாய்ப் பரனார் களிகூர்ந்திடவே
தொனியா யெழுந்தவர்க்கே- சுப
3.அங்கங் குளிர்ந்திடவே உல
கெங்கும் மகிழ்ந்திடவே
அடியாருடசா வுடகூ ரொடித்து
அகில மெழுந்தவர்க்கே.- சுப
4.காலையிலே எழுந்து நிதம்
கர்த்தனையே நினைத்துக்
கரமே குவித்துத் துதிபா டிடவே
காலை யிலெழுந்தவர்க்கே.- சுப
5.ஆனந்தம் பாடிடவும் பரன்
அன்பைக் கொண்டாடிடவும்
அசையா நிலையோ டெழுந்து தொழவே
அருள் கூர்ந்திடு பவர்க்கே- சுப
6.எக்காளமே தொனிக்க பக்தர்
யாவருமே யெழும்ப
இனிதாய் அரசா ளவுமேயுலகில்
எழு மிம்மானு வேலர்க்கே.- சுப

Leave a Comment Cancel Reply

Exit mobile version