Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

பல்லவி
வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!
சரணங்கள்
1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்
நிலைத்திருக்காதே; இப்போ
தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
தாமதஞ் செய்யாதே – வா
2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
இரத்தம் அதோ பாராய்! – மனஸ்
தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
இக்ஷணமே வாராய் – வா
3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்
தீவிரமா யோடிவா – உன்
பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக்
குட்டியின் அண்டைக்கு வா – வா
4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
எப்போ குணப்படுவாய் நீ?
ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
இப்போ இரட்சிப்படைவாய்! – வா

Leave a Comment Cancel Reply

Exit mobile version