Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே,
என் அடைக்கலம் நீரே;
நான் என் பாவப் பாரத்தால்
தொய்ந்து போய்க் கலங்கினால்,
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.
2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா
புண்ணியமும் விருதா;
தளரா முயற்சியால்,
மனஸ்தாபக் கண்ணீரால்
குற்றம் நீங்காதென்றைக்கும்;
கிருபைதான் ரட்சிக்கும்.
3. உள்ளவண்ணம் அண்டினேன்,
அன்பாய் என்னை நோக்குமேன்;
திக்கற்றோன் நான், ரட்சியும்;
அசுத்தன் நான், கழுவும்.
மூடும் என் நிர்வாணத்தை;
எழைக்கீயும் செல்வத்தை.
4. வாதையுற்ற மீட்பரே,
என் அடைக்கலம் நீரே,
என் இக்கட்டனைத்திலும்,
சாகும் தருணத்திலும்
என் அடைக்கலம் நீரே,
வாதையுற்ற மீட்பரே.

Leave a Comment Cancel Reply

Exit mobile version