Vinnin Venthan Mannil – விண்ணின் வேந்தன் மண்ணில்

விண்ணின் வேந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்

அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் – 2

1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் – அன்னையுள்ளம்

2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
தூதர் வந்து பாட – அன்னையுள்ளம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version