Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

பல்லவி
ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையா
சரணங்கள்
அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை – இயேசையா
கடினமாக வேலை செய்தோம்
மாரியிலும் கோடையிலும் – இயேசையா
மட்டில்லாத வருத்தத்துடன்,
தேவன் தந்த நஞ்சை நிலத்தை,
சமமாக வெட்டி ஏர்களுமுழுது,
கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கி
இல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,
வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,
களையும் பறித்து நெற்பயிராக்கி,
நாலு பக்கமும் வேலியடைத்து,
நாற்கால் மிருகங்கள் வராதபடி,
காவலுங் காத்தோம் ஏழைகள் நாங்கள்
தானியம் முற்றி அறுத்துப் போர் செய்து
கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தோமே

Leave a Comment Cancel Reply

Exit mobile version