அன்பிலே பூரணரே – Anbilae Pooranarae

பல்லவி
அன்பிலே பூரணரே – எங்கள்
ஆனந்த ரூபா அதிசய ராஜா
அனுபல்லவி
அழகில் சிறந்தோனே – எங்கள்
ஆசையின் கோமானே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே – அன்பிலே
சரணங்கள்
1. காத்தீரே கருணையுடன் – எம்
கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக்
கதியில்லா ஏழைகளின் – பெரும்
கவலைகளைப் போக்கி
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன் – அன்பிலே
2. ஆனந்தம் ஆனந்தமே உம்
ஆருயிர் ஈந்திர் அவனியில் வந்தீர்
அலகைதனை வென்றீர் அவன்
அடிமைகளை மீட்டீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் – அன்பிலே
3. கோடையில் குளிர்தருவே – கடும்
வாடையின் மறைவே ஏழையின் உறவே
கூடுவோம் திருப்பாதம் – தினம்
பாடுவோரும் அவர் கீதம்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அன்பே, இன்பமே, அன்னையின் மேலாய் – அன்பிலே
4. நித்திய பரிசுத்தரே – உம்
வருகையில் அடியாரைப் பரிசுத்ம் செய்யும்
உத்தம ஜீவிகளாய் நல்
நித்திய வாழ்வினிலே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் – அன்பிலே
5. தோத்திரம் துதியுமக்கே – தேவ
அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
ஆயத்தமுள்ளோர்க்கே நீர்
அருணோதயமாவீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் – அன்பிலே

Leave a Comment Cancel Reply

Exit mobile version