என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics

என் தாயினும் மேலானவர்
என் தந்தையிலும் மேலானவர்
என் அப்பா உம் தோலினில் சாயுவேன்
என் அப்பா நான் அனாதை அவதில்லை

1 ) என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்
என் குறைவுகள் யாவையும் சொல்லும்முன்னே
என் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே – என் அப்பா

2) என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டார்
என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்
என் வரும்மையை நீக்கவே பலியானீர்
என்னை உயர்த்த தாழ்ந்தவரே

என் அப்பா உம் கரங்களில் ஆணியோ
என் அப்பா உம் சிரசினில் முள்முடியா

En Thaayinum Melaanavar
En Thandhiyilum Melaanavar
En Appa Um Tholinil Saayuvean
En Appa Naan Anaadhai Avadhillai

1. En Thaayin Karpathil Kaapattrineer
Oru Thanthaiyai pola Irangukintreer
En Kuraiyukal yaavaiyum sollummunnae
En Thevaigal Anaithaiyum Arindhavarae

2.En Viyathikal Rohangal theerthuvittar
En Paavangal saapangal neekkivittar
En Varumaiyai Neekavae paliyaaneer
Ennai Uyartha Thazhthavarae

En Appa Um Karangalil Aaniyo
En Appa um sirasinil Mulmudiyo

Testimony About The Song :
அநேகருக்கு நான் போதகராய் இருந்தாலும் என் தாய் தகப்பனுக்கு என்றுமே நான் பிள்ளைதான்
திடீர் என்று என் தாயும் என் தகப்பனும் கர்த்தருக்குள்ள நித்திரை அடைந்து ,சொல்லமுடியாத வேதனையில் நான் இருக்குபோதே
தாய் தகப்பனை இழந்த அந்த அனுபவம் என் உள்ளத்தை உருக்க ஆரம்பித்துவிட்டது, எனக்கு
தாயும் தகப்பனும் இல்லை என்கிறதான வேதனையும் ,என்னோடு அவர்கள் இன்னும் சில நாட்கள்
இருந்துருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கமும் என் வாழ்க்கையிலே பெறுக
ஆரம்பித்துவிட்டது,நான் தாய் தகப்பன் இல்லாத அனாதையா என்று நினைக்கிற நேரத்தில்தான்
கர்த்தர் என்னோடுகூட பேசி,நானே உன்னுடைய தாயும் , தகப்பனும் என்று சொல்லி இந்த பாடலை கொடுத்தார்
இந்த பாடலை உங்கள் சபைகளிலும் , உங்கள் வீடுகளிலும் பாடி கர்த்தருடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள்.

Leave a Comment Cancel Reply

Exit mobile version