ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்
நான் விலகி சென்ற போதும்
என்னை வெறுக்காதவர்-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்
1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி
ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே
பாவ சேற்றினில் நான் விழுந்தாலும்
உம் வலக்கரம் என்னை தாங்குமே-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்
2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
அவர் ஒருநாளும் விலகாதவர்
உம் (அவர்) அன்பு அது மாறாதது
அது ஒருபோதும் மாறிடாதது-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்

Leave a Comment