தாய் மறந்தாலும் அவர் உன்னை – Thai Marandhalum Avar Unnai

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2

ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா-2-தாய்

1.பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும்-2
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒருபோதும் மறப்பதில்லை-2-தாய்

2.நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும்-2
நல்ல நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உண்மை நண்பர் நம் இயேசுவே
உன்னை ஒருபோதும் கைவிடாரே-தாய்

3.அன்பானவர் மறைந்தாரோ
ஆதரவை இழந்தாயோ-2
ஆறுதலின் தேவன் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்
உண்மை தேவன் நம் இயேசுவே
உன்னை ஆற்றி தேற்றி நடத்திடுவார்

தாய் மறந்தாலும் அவர் என்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை-2

ஆ.. அல்லேலூயா.. ஓ… ஓசன்னா

தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒருபோதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் நம்மை வரைந்தவர்
ஒருபோதும் விடுவதில்லை
அவர் ஒருபோதும் மறப்பதில்லை
இயேசு ஒருபோதும் விடுவதில்லை

Leave a Comment Cancel Reply

Exit mobile version