துதிப்பேன் இயேசுவின் பாதம்

கண்ணிகள்
1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி
2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி
3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி
4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி
5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி
6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் – துதி

Leave a Comment