யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

Leave a Comment Cancel Reply

Exit mobile version