வாழுவேன் அன்பர் நாடதில் -Vaazhuvean anbar naadathil

வாழுவேன், அன்பர் நாடதில் ஆர்ப்பரிப்புடன்
வாஞ்சையுடன் காத்த எந்தன் ஆவல் தீர்த்திட்டார்
வாழுவேன் இன்ப நாடதில்
1. என்ன இம்மேன்மை என் போக்காய்த் தானோ?
என்னென்ன இன்பம் என் சொந்தமானதோ?
ஏற்றுவேன் என் உள்ளமதனால் – துதி
என்றும் என்னை மீட்ட அன்பைக் கூறுவேன் நிதம் – வாழு
2. அன்பின் மகிமை, அன்பே நான் காண
அன்பே, உம் சாயல் என்னில் தரித்தீரே
ஆனந்தத்தால் சாற்றிடுவேன் நான் – துதி
அன்பே உள்ளமதில் பொங்கிச் சாடுதே எனில் – வாழு
3. கைவேலையில்லா கனமான வீடே
கைவசமாக்க அருள் என்னிலிருந்தீரே
காதலா, நின் நன்றி கூறுவேன் தினம்
காலா காலங்களாகப் பாடிடுவேன் நான் புகழ் – வாழு
4. நின் கிருபை தேவா என்றென்றுமாக
இவ்வேழை காண இதயந் திறந்தீரே
இன்பமாகப் போற்றிடுவேன் நான் – இனி
இன்னோர் அண்ணலெனக் கெங்குமில்லையே வேறு – வாழு
5. உம் ரூபம் தானே என் பிரியம் தேவே
உம்மோடு சேர என் நெஞ்சு பொங்குதே
உன்னதமான உம்மேன்மை எத்தனை – மகா
ஊற்றுவேன் நிதம் என் உள்ளமதை நான் நிதம் – வாழு

Leave a Comment Cancel Reply

Exit mobile version