Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே

மகாராஜாவே என் இயேசைய்யா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே

மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்து போன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை

ஒன்னுமே புரியலப்பா
என அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா

தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன்

அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடாத நேசமே

Leave a Comment