Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா
உம்மோடு நான் வாழ்ந்திட
ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா
உம் அன்பை நான் பாடிட
ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா
உம்மை நான் வர்ணித்திட
ஆயிரம் நாவுகள் போதாதைய்யா
உம் நாமம் நான் போற்றிட

1.ஒருவராய் அதிசயம் செய்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்
பெரியவராய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

2.தாழ்மையில் எங்களை நினைத்தவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்
தாபரமாய் என்றும் இருப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

3.விழுகிற மனிதரை தூக்கினீரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம்
அழுகிற மனிதரை தேற்றினீரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

4 வேண்டுதல் செய்கையில் கேட்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2 – உந்தன்
வார்த்தையின்படி எம்மை காப்பவரே
உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version