BAYAPADATHEY NEE VETKAPATTU – பயப்படாதே நீ வெட்கப்பட்டு

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2
உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன்
என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2


வலது புறமும் இடது புறமும்
இடம் கொண்டு பெருகிடுவாய்
பாழாய் கிடந்த பட்டணங்களை
சுதந்தரித்து குடியேருவாய் – 2


1. என் தாசனாகிய யாக்கோபே
யேஷுரனே பயப்படாதே – 2
நீரோடை அருகிலுள்ள
அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2

2. நீதியினாலே ஸ்திரப்படுவாய்
கொடுமைகட்கு தூரமாவாய் – 2
பயமில்லாதிருப்பாய்
திகிலுக்கு தூரமாவாய் – 2


3. இமை பொழுது உன்னை கை விட்டாலும்
என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2
இமை பொழுது முகம் மறைத்தேன்
கிருபையுடன் இறங்கிடுவேன் – 2

Leave a Comment Cancel Reply

Exit mobile version