விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli

1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் எழுந்திராய்! 3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது, முனிவர் துதிகளின் மூட்மெழும்புது, காத்த கர்த்தரின் கரமுமெழும்புது, கடுகி மனமே, நீ எழுந்திராய்! 4. அந்தகாரமும் அகன்றுபோகுது, அழகுத் தாமரை அரும்பு மலருது, இந்த […]

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli Read More »

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும் ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி! மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத் தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி! சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள் மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி! துன்பந்துயரம் சோர்வினில் அடியரை அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி! அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி! பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச் சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி! உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த

வானமும் புவியும் வழங்கு – Vaanamum Puviyum Read More »

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

பல்லவி வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச் சேரும், வினையறுத் தெனைச் சேரும். அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும் சரணங்கள் 1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில் விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே, ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும் சதியை அகற்றி எனையாட் கொள்ளவே, அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல் அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும் 2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத மார்க்கத்

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Read More »

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

பல்லவி பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும் போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள். அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி சரணங்கள் 1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள், காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார். அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம், ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி 2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும், அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும், சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். –

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai Read More »

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae

பல்லவி பின்செல்வேன், என் மீட்பரே;-நான் உன்னைப் பின்செல்வேன், என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர, நாதா, ஜீவன் விட்டாய் வன் குருசிலதால், – பின் சரணங்கள் 1. என் சிலுவை எடுத்தேன்,-எல்லாம் விட்டு என்றும் நின்னையே அடுத்தேன்; நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான் நித்தமும் வாழ்வேன் உன் சித்தம் என்றும் செய்து, – பின் 2. சிங்கம் போல கெர்ச்சித்தே-என்றன் நெரே சீறி மிக வெதிர்த்தே; கங்குல் பகலும்

பின்செல்வேன் என் மீட்பரே – Pinselvean en meetparae Read More »

பரனே பரம் பரனே – Paranae param paranae

1. பரனே பரம் பரனேபரப் பொருளே, பரஞ்சோதீ, உரனாடிய விசுவாசிகட் குவந்தாதரம் புரியும்! பெருமான் அடி யேனோபெரும் பாவிபிழை பட்டேன்; சரணாடிவந் தடைந்தேன் ஒரு தமியேன்கடைக் கணியே! 2. தூலத்தையு வந்துண்டுசு கித்துச்சுகம் பேணிக் காலத்தையுங் கழித்தேன் உயர் கதிகூட்டும் ரக்ஷணிய மூலத்தனி முதலே, கடை மூச்சோயுமுன் முடுகிச் சீலத்திரு முகத்தாரொளி திகழக்கடைக் கணியே! 3. கோதார்குணக் கேடன், மிகக் கொடியன், கொடும்பாவி, ஏதாகிலு நன்றொன்றில னெனினும் புறக்கணியா-து ஆதாரசர் வேசாவன வரதாவரு ணாதா, பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப்

பரனே பரம் பரனே – Paranae param paranae Read More »

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam

1. பரலோக தந்தாய்! நின்னாமம்-அதி பரிசுத்தமுறவே, நின் ராஜ்யம் வரவே, நினது திருவுளச் சித்தமே பரமதில் போலிங்கும் துலங்கிடவே. 2. அன்றாடம் உணவளித்திடுவாய்;-யாம் அயலார் செய்பிழை பொறுப்பதுபோல், இன்றே எங்கள் பவங்களைப் பொறுத்தே நன்றருள்வாய் நரபரிபாலா! 3. சோதனையறக் கண்பார்த்திடுவாய்;-வரு தீதனைத்திலும் எமைக் காத்திடுவாய்; நீதா, ராஜ்யம் வல்லப மகிமை நினைக்கே யுரிய எக்காலமுமே!

பரலோக தந்தாய் நின்னாமம் – Paraloga Thanthaai Ninnamam Read More »

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar

பல்லவி பரம சேனை கொண்டாடினார்; பரன் இரக்கத்தைப் பாடினார். சரணங்கள் 1. பரத்திலே இருந்து பதி பெத்தலேம் வந்து, பரன் நரரூபணிந்து பணிவானதில் சிறந்து, – பரம 2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி, கிருபைப் பரனைப் போற்றி, கிறிஸ்தின் பிறப்பைச் சாற்றி, – பரம 3. சர்ப்பப்பேயை வென்று, சகலர்க் கேய நன்று அற்புதமாக இன்று அத்தன் பிறந்தார் என்று, – பரம

பரம சேனை கொண்டாடினார் – Parama seanai kondadinaar Read More »

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan

பல்லவி தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன். சரணங்கள் 1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர் பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்; நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர் கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத் 2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்; மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்; தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;- மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்;

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan Read More »

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும், நீசரைத் தேவ புத்திரராக்கவும், நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர் 2. நீடிக தயை யுடன் நீசரை நித்தம் பரிபாலிக்கும் நேசரை நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர் 3. அடியார் பிழை பொறுத்தன்புடன் ஆதரித்தாரே மிக இன்புடன்; அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர் 4. அந்தமும் ஆதியு

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana Read More »

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham

பல்லவி சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும் தூரமாகாதாள்வாய், நேசனே. அனுபல்லவி எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல் சரணங்கள் 1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால் இறையோனே காதில் நுழையாதோ? திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி சேர்க்க என்றனை அழையாயோ? அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்; விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். –

சொல்லிவந்துன் பாதம் – Solli vanthun paatham Read More »

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean

பல்லவி சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத் தெரிசித்துக் கண்டேன், ஐயா. சரணங்கள் 1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி 2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி

சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean Read More »