Devanae Yesu Naathanae – தேவனே யேசுநாதனே

தேவனே, யேசுநாதனே இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க் கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்
சரணங்கள்
பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
பாத்திரர்களோ அல்லவே
பாவநாசராம் யேசுவே உம்மால்
பாத்திரராய் இதைச் செய்தனர் – தேவ
கூடிவந் தும்மையே பணிந்திடக்
குறித்த இச்சிறு ஆலயம்
நாடி வந்தவர் யாவருக்குமுன்
நல்வசன முளதாகவும் – தேவ
தேவனே உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்

Leave a Comment Cancel Reply

Exit mobile version