Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள்

கிருபை புரிந்தெனை ஆள்
பல்லவி
கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
சரணங்கள்
1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை
2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை
3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை
4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை
5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை
6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை

Leave a Comment Cancel Reply

Exit mobile version