குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு
- சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
 சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
 திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
 சேனைத்திரள் சூழ — குருசினில்
- பாதகர் நடுவில் பாவியினேசன்
 பாதகன் போல் தொங்க – யூத
 பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
 படுத்திய கொடுமைதனை — குருசினில்
- சூரிய சந்திர  சகல வான் சேனைகள்
 சகியாமல், நாணுதையோ! – தேவ
 சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
 துடிக்கா நெஞ்சுமுண்டோ? — குருசினில்
- ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
 இறைவன் விலாவதிலே – அவர்
 தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
 திறந்தூறோடுது பார் — குருசினில்
- எருசலேம் மாதே, மறுகி நீயழுது 
 ஏங்கிப் புலம்பலையோ? – நின்
 எருசலையதிபன் இள மணவாளன்
