Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

பல்லவி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
பக்ஷமுடனே இரட்சகரண்டை ஓடி வா
சரணங்கள்
1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி

Leave a Comment