Saranam Nambinean – சரணம் நம்பினேன்

பல்லவி
சரணம் நம்பினேன் யேசு நாதா-இது
அனுபல்லவி
தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம்
சரணங்கள்
1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து,
முன் னாள் வினையைத் துறந்து,-ஆதி
மூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம்
2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே,
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம்
3. அலைவாய்த் துரும்புபோல் ஆடி,-உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்,
தொலையாத வாழ்வை மன்றாடி,-அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி. – சரணம்
4. இனிய கருணை பொழிவேதா,-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா,
கனி வினை நீக்கிய நீதா,-நசரைக்
கர்த்தாதி கர்த்தா, உன் கருணையைத் தா, தா. – சரணம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version