Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்

பல்லவி
சரணம், சரணம், சரணம் எனக்குன்
தயைபுரியும், என்பரனே.
அனுபல்லவி
மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
மன்னா, ஓ சன்னா! – சரணம்
சரணங்கள்
1. தரணிதனில் வந் தவதரித்த தற்
பரனே, எனக்காக-வலு
மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்
மகிமை, நித்திய பெருமை. – சரணம்
2. சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்
துரோகியான எனக்கு-நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க, உண்
டேது நலம் என்மீது – சரணம்
3. தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
தானே வந்து தேட;-உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட. – சரணம்
4. எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை
ஏழை அடியேனே-பற்றி
இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய், எனக் கிரங்காய் – சரணம்

Leave a Comment Cancel Reply

Exit mobile version