தந்தானை துதிப்போமே- 
திருச் சபையாரே, கவி-பாடிப்பாடி
அனுபல்லவி
விந்தையாய்
நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர்
நன்மை மிகமிகத்ஷ -தந்
சரணங்கள்
- ஒய்யாரத்துச் சீயோனே- நீயும் 
 மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
 ஐயனேசுக்குனின் கையைக்
 கூப்பித் துதி
 செய்குவையே, மகிழ்கொள்ளு
 வையே, -நாமும் -தந்
- கண்ணாரக் களித்தாயே,- 
 நன்மைக்
 காட்சியைக் கண்டு ருசித்துப்
 புசித்து
 எண்ணுக்கடங்காத
 எத்தனையோ நன்மை
 இன்னுமுன்மேற் சோனாமாரி
 போற் பெய்துமே – தந்
- சுத்தாங்கத்து நற்சபையே- 
 உனை
 முற்றாய்க் கொள்ளவே
 அலைந்து திரிந்து
 சத்துக் குலைந்துனைச்
 சத்தியாக்கத் தம்மின்
 ரத்தத்தைச்சிந்தி எடுத்தே
 உயிர் வரம் – தந்
- தூரம் திரிந்த சீயோனே- 
 உனைத்
 தூக்கியெடுத்துக்
 கரத்தினிலேந்தி,
 ஆரங்கள் பூட்டி அலங்கரித்து
 நினை
 அத்தன் மணவாட்டி
 யாக்கினது என்னே! – தந்
- சிங்காரக் கன்னிமாரே,- உம் 
 அலங்காரக் கும்மி அடித்துப்
 படித்து,
 மங்காத உன் மணவாளன்
 யேசுதனை
 வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்
 பணிந்திடும் – தந்
