Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே

1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் – 2

2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் – 2

Leave a Comment Cancel Reply

Exit mobile version