பல்லவி
ஏசு நாயகனை துதி செய்,செய்
செய், செய், செய் ஏசு நாயகனை
சரணங்கள்
1.பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே
பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும்
பொய், பொய், பொய், பொய், பொய்,- ஏசு
2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்
வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது
மெய், மெய், மெய், மெய், மெய் – ஏசு
3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி கதிர் மீன் முதல் பொருளதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை, வை, வை, வை, வை – ஏசு
4.நாதபூத பௌதீக ஸ்தாபகனை, வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய், உய், உய், உய், உய், – ஏசு