இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum

பல்லவி
ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே
அனுபல்லவி
ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே,
ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்;
ஐயா, நேயா, தூயா, ரட்சியும்;
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு
சரணங்கள்
1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா?
ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா,
தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா,
தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே,
தாதா! நாதா! நீ தா! நீ கா!
தருமப் பிரகாசனே, பரம சருவேசனே. – ஏசு
2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந்தாவே,
ஆதாமின் பாவத்தால் மானிடன் ஆன மெய் வாழ்வே,
விந்தைக் கிருபை அளிக்க வேண்டும்; விமலா, நிமலா, அமலா,
வேறு பண்ணாதே,-மிகும் சீறு-மாறு நண்ணாதே;
மேலா, கோலா, நூலா, நீயே
விரும்பிச் சேரும், கோவே; திரும்பிப் பாரும், தேவே. – ஏசு

Leave a Comment Cancel Reply

Exit mobile version