வாழ்வளிக்கின்றார் இயேசு- Vaazhvalikintraar yesu

வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார்
வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட
1. பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார்
பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர்
பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில் – வாழ்
2. ஞானியர் என்றாலும் இயேசுநேசமாய் ஏற்கின்றார்
நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர்
நலம்பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில் – வாழ்
3. தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார்
தம் நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர்
தலை நிமிர்ந்துயர்ந்திட அவரிடம் வந்திடில் – வாழ்

Leave a Comment