Bethalayil piranthavarai – பெத்தலையில் பிறந்தவரை christmas song lyrics

DOWNLOAD -PPT 

பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Leave a Comment