En yesu Paalan pirantharae Lyrics

என் இயேசு பாலன் பிறந்தாரே
எழிலோடு கண்கள் திறந்தாரே
பனி தூவும் நள்ளிரவுக் குளிரில்
மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2

இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்
அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2
உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்
உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2

முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !
குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2
மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே
சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2

கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட
மூவரசர் தேடிவந்து பதம் நாட – 2
ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட
ஆனந்த அற்புதர் வந்தாரே – 2

Leave a Comment