Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

1. கர்த்தா, நீர் வசிக்கும்
ஸ்தலத்தை நேசிப்போம்;
பாரின்பம் யாவிலும்
உம் வீட்டை வாஞ்சிப்போம்.
2. உம் ஜெப வீட்டினில்
அடியார் கூட, நீர்
பிரசன்னமாகியே
உம் மந்தை வாழ்த்துவீர்.
3. மெய் ஞானஸ்நானத்தின்
ஸ்தானத்தை நேசிப்போம்
விண் புறாவாம் ஆவியால்
பேரருள் பெறுவோம்
4. மா தூய பந்தியாம்
உம் பீடம் நேசிப்போம்
விஸ்வாசத்தால் அதில்
சமுகம் பணிவோம்.
5. மெய் ஜீவனுள்ளதாம்
உம் வார்த்தை நேசிப்போம்
சந்தோஷம், ஆறுதல்
அதில் கண்டடைவோம்.
6. உன் அன்பின் பெருக்கை
இங்கெண்ணிப் போற்றுவோம்
விண் ஜெய கீதமோ
எப்போது பாடுவோம்?
7. கர்த்தா, உம் முகத்தை
கண்ணாரக் காணவே,
உம்மை இப்பாரினில்
நேசிக்க ஏவுமே.

Leave a Comment