Maa Perithaam Nin kirubai – மா பெரிதாம் நின் கிருபை

1. மா பெரிதாம் நின் கிருபை
சாவரை மறவேனே;
மாதாவின் கர்ப்பத்திருந்தே
மா தயவாய் என்னையே
அழைத்தீரே,
மா தவம் நான் செய்தேனோ?
2.அந்தகாரத்தால் நிறைந்து
சொஸ்தமின்றி வாழ்ந்தேனே;
தந்து உம்மைச் சொந்தமாக
என்தனை நீர் மீட்டீரே;
நாதா உம்மை
என்றும் நான் துதிப்பேனே.
3.நான் நினைத்த பாதை வழி
தேன் கசியும் பக்கமே
செல்ல எத்தனித்த போது,
அல்லவென்று தடுத்தே
ஆட்கொண்டீரே,
ஆண்டாண்டும்மைப் போற்றுவேன்.
4.ஊழியத்தை உண்மையுடன்
வாழ்நாளெல்லாம் செய்யவும்;
நீடும் கிருபை சூடியென்னை
வீடு சேரும்வரையும்
பலவீனம்
தாங்கி தயை செய்வீரே.

Leave a Comment Cancel Reply

Exit mobile version