Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலே
மன்னன் பிறந்தது தொழுவினிலே-2
தூதர்கள் பாடிடும் பொழுதினிலே
துயில்கின்றது அன்னை மடியினிலே-2

உறவின் பாலம் உதித்ததிங்கே
உலகம் உறையும் மாதத்திலே-2
அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்
அகிலம் எங்கும் அவரின் காதலே
அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி
இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Leave a Comment