நம்பிடுவேன் எந்நாளும்- Nambiduvean ennalum

1. நம்பிடுவேன் எந்நாளும்
துன்பம் துயரானாலும்;
எந்தன் இயேசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்!

பல்லவி

நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்

2. ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவிதான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள்

3. பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள்

4. ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்,
இயேசுவையே நம்புவேன் – நேரங்கள்

Leave a Comment