Pirana Naayaga – பிராண நாயகா

பல்லவி
பிராண நாயகா!
பிராண நாயகா! – பாவ
ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
பிராண நாயகா!
சரணங்கள்
1. இன்னிலத்தோர் மாளுகின்றார்
சாபத்தினாலே – இந்தக்
கொடிய சாபம் வந்த காரணம்
பாவத்தினாலே – பிராண
2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
பாதம் தேடாமல் – இவர்
பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
இயேசுவை நாடாமல் – பிராண
3. கல்லான இருதயங்களைக்
கரைக்கும் தெய்வமே – இந்தப்
பொல்லாத பாவிகள் மேல்
இரக்கம் வையுமேன் – பிராண

Leave a Comment