RAAJA RAAJAN PIRANTHAAREY – ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4
செம்மேனி அழகு வாய்ந்தவர்
செம்பாவம் போக்க வந்தவர்
முன்னனை மீதினில் வந்ததுதித்தார்
வந்ததுதித்தார்-ராஜ ராஜன்

1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்
பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2
கந்தை கோலமாக தேவன்
கன்னி வயிற்றினில் பிறந்தாரே
நிந்தை யாவும் நீக்கிடவே
நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன்

2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்
இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2
விண்ணின் தூதர் பாட்டுப்பாட
விண்ணின் மைந்தன் பிறந்தாரே
இயற்கையும் அவர் அழகைப்பாட
இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

Leave a Comment