Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க
எந்நாள், நாதா, வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?
2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?
நாதா, வார்த்தை ஈயுமே;
வார்த்தை ஈயும் சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்,
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்க செய்திடும்
3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்;
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய, கிறிஸ்து ஆளுவார்;
பசி தாகம் நோவு சாவும்
கண்ணீர் யாவும் நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்
இயேசு ஸ்வாமி, வாருமே.

Leave a Comment