Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்

1. தூய பந்தி சேர்ந்த கைகள்
சேவை செய்யக் காத்திடும்
தூய தொனி கேட்ட செவி
தீக்குரல் கேளாமலும்.
2. ”தூயர் தூயர்” என்ற நாவு
வஞ்சனை பேசாமலும்
தூய அன்பைக் கண்ட கண்கள்
என்றும் நம்பி நோக்கவும்.
3. தூய ஸ்தலம் சென்ற கால்கள்
ஒளியில் நடக்கவும்
தூய ஆவி பெற்ற எம்மில்
நவ ஜீவன் பொங்கவும்.

Leave a Comment