Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்
விண் மீன்கள் நடுவினில்
தேவன்பை உலகினில்
விதைக்கப் பிறந்தார்

1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்
முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்
பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்
மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார்

கூடுவோம் பாடுவோம்
கூடுவோம் போற்றுவோம்

2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்
ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்
பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்
என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Leave a Comment